மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் 'போக்சோ' வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.சஸ்பெண்ட்: விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா 'சஸ்பெண்ட்' செய்தார்.
அவர் கூறுகையில் “புகார் அளித்தவுடன் பெண்கள் பள்ளியில் இருந்து ஆண்கள் பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில் கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,'' என்றார்.
No comments:
Post a Comment