பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை - Asiriyar.Net

Wednesday, January 2, 2019

பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை





பள்ளி மாணவர்கள் நல்ல மனநிலையில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் குழுக்கள் அமைக்க அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.

நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரைத்துள்ளது. ஒழுக்கம், நன்னெறி, வழிகாட்டுதல் வழங்க கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாடங்கள், அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad