முதுகலை பட்டபட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 29, 2021

முதுகலை பட்டபட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

 






தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். 


மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.



தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021

Chennai TNRD Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:-

பணிகள் ஆற்றுப்படுத்துநர்

விளம்பர எண் 15

மொத்த காலியிடம் 09

பணியிடம் சென்னை

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 27.01.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் chennai.nic.in



கல்வி தகுதி:

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



தொகுப்பூதியம் விவரம்:

(ஒரு வருடத்தில் 70 நாட்களுக்கு மிகாமல் வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1,000/- வழங்கப்படும்.


தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்ப முறை:

அஞ்சல் (offline)



அஞ்சல் முகவரி:

கண்காணிப்பாளர்,

சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் ,

எண். 58, சூரிய நாராயண சாலை,

இராயபுரம், சென்னை-13.

தொலைப்பேசி எண்: 8903625675 / 044- 25952450.



சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

chennai.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

பின் Press Release என்பதில் Post Graduates in Psychology and Counselling, can apply to offer counseling services at the Government Children’s Home என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.


OFFICIAL NOTIFICATION





Post Top Ad