Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, January 28, 2021

ஆதார் - மொபைல் நம்பர் இணைப்பு: முக்கிய அறிவிப்பு!

 






தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதாரில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களது மொபைல் எண்ணை ஆதாரில் இணைக்க வேண்டும்.


ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும்.

50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்யலாம்.



இதுவரை உங்களது மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்யவில்லை என்றால், நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆதாரில் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும் முடியாது. ஆதார் எண்ணில் மொபைல் எண்ணை இணைப்பது மிக எளிதான ஒன்றுதான். அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையங்களில் இணைக்க முடியும். இதுகுறித்து UIDAI அமைப்பு ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. மொபைல் நம்பரை ஆதாரில் இணைக்க எந்தவொரு ஆவணமும் தேவையில்லை என்று UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது.



ஆதார்: இதைச் செய்யாவிட்டால் ஆபத்து!!


இதுகுறித்து UIDAI அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ’ஆதார் சேவை மையங்களுக்கு ஆதார் கார்டை எடுத்துச் சென்று மொபைல் நம்பரை இணைக்கவோ அப்டேட் செய்யவோ முடியும். https://appointments.uidai.gov.in/easearch.aspx?AspxAutoDetectCookieSupport=1 என்ற முகவரியில் சென்று அருகிலுள்ள ஆதார் மையத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது. ஆதார் மையத்துக்குச் செல்வதற்கு முன்பாக ஆன்லைன் மூலமாகவே அப்பாயின்மெண்ட் பெற முடியும். ஆதார் அப்டேட்டுக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LightBlog