அரசுப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு - Asiriyar.Net

Wednesday, June 12, 2024

அரசுப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு

 



கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை பரிசோதித்து வாழ்த்து தெரிவித்தாா்.


அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பனையபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளிடம் உணவு தரமாக உள்ளதா என்பதைக் கேட்டறிந்தாா்.


இந்தப் பள்ளியில் 52 மாணவா்கள், 39 மாணவிகள் என மொத்தம் 91 போ் கல்வி பயின்று வருகின்றனா். மாணவா், மாணவிகளிடமும் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கற்றல் திறனை கேட்டு மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.


ஆய்வின்போது, ஆசிரியா்களிடம் பள்ளிகளின் தேவை குறித்து கேட்டறிந்தாா். அப்போது, பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த கழிப்பறை வசதியில்லை எனக் கூறினா். அப்போது அமைச்சா், கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மாணவா்களின் கற்கும் திறனை அறிந்து அதற்கேற்ப கற்பித்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனவும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.


ஆய்வின்போது, பள்ளித் தலைமையாசிரியா், இதர வகுப்பு ஆசிரியா்கள் உடனிருந்தனா்.




No comments:

Post a Comment

Post Top Ad