தமிழக பள்ளிகளுக்கு 25.12.21 முதல் 02.01.21 வரை விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி
( 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜன.2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை இன்று அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு.
பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment