கேன்சரை பூண்டோடு அழிக்கும் பூண்டு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 22, 2019

கேன்சரை பூண்டோடு அழிக்கும் பூண்டு!




ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று பூண்டு. பூண்டை சமையலில் சேர்த்தும், பச்சையாகவும் சாப்பிடுவோம்.

பூண்டு ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

இதை பச்சையாக சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சரிசெய்யலாம்.

ஆறு பூண்டை வறுத்துச் சாப்பிடுவதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஆறு வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, உடல் நலனைப் பாதுகாக்கும்.

நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும். மேலும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

ஏழு முதல் பத்து மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கும்.

பத்து முதல் இருபத்துநான்கு மணி நேரத்தில் பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்து, இதயநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

மேலும் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கும், தமனிகளை சுத்தம் செய்யும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் மற்றும் உடலின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும்.

ஆப்ரேஷன் மூலம் எடுத்த கேன்சர் கட்டி பூண்டை விட்டு விலகுவதைப் பாருங்கள்

https://youtu.be/Ka1N18jvX3A






Post Top Ad