10, 11, 12 பொதுத்தேர்வு தொடங்க ஒருசில நாட்களே உள்ள நிலையில்..அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 27, 2020

10, 11, 12 பொதுத்தேர்வு தொடங்க ஒருசில நாட்களே உள்ள நிலையில்..அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை.!






மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறகிறது.

10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.


பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியாகிறது.

பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.

இந்தநிலையில், இந்தாண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுது உள்ள மாணவர்கள் தேர்வின்போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது எனவும், விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என தேர்வுத்துறை நினைவூட்டியுள்ளது.

குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்க கூடாது என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப் பட்டுள்ளதாக தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.

Post Top Ad