மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பணபரிவர்த்தனை கிடையாது - இந்தியன் வங்கி அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 21, 2020

மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பணபரிவர்த்தனை கிடையாது - இந்தியன் வங்கி அறிவிப்பு






இந்தியன் வங்கி மார்ச் 1-ஆ ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பணபரிவர்த்தனை கிடையாது என அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டின் இறுதியில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வெளியிடப்பட்டது.



2000 நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று ஒரு அறிக்கையில் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் ரூ.2000 நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்போதும் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனி ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் வருகிற மார்ச் 1-ஆ ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.



Post Top Ad