போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 6, 2023

போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 



புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பின் சார்பில் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜாக்டோ, ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெல்கிராஜாசிங், ஷேக்கபூர், ராஜாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் ஆர்.கணேசன், ம.லோகையா, ஆர்.குப்புசாமி, மு.ஜம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  


இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கினார். அவர் பேசுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கவும், அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மட்டும் பணியமர்த்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். வருகிற 24ம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்து மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.




Post Top Ad