ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் நடந்த தியாகிகள் வீர வணக்கநாள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. யார் முதல்வராக இருந்தாலும் நிதி இருந்தால் தானே அதிக ஊதியமும் சலுகையும் அளிக்கமுடியும். எதிர்க்கட்சிகள் துாண்டுதலால் தான் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.