2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கையின் படி உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்திற்குள் தகுதியுள்ள காலிப்பணியிடங்களில், பணிநிரவல் செய்தும், கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர்களை தேவையுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கிடுமாறு பார்வை (8) மற்றும் (10) இல் காண் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வை (8) மற்றும் (10) இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அரசு நிதி உதவி பெறும்/ பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி பட்டதாரி பணிநிரவல் கலந்தாய்வு கீழ் கண்டவாறு நடைபெற உள்ளது.