பிப்ரவரி 1-இல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை: அமைச்சா் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 27, 2022

பிப்ரவரி 1-இல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை: அமைச்சா் அன்பில் மகேஷ்

 




தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை கூறினாா்.


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரண- சாரணியா் தமிழக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கத்தில் பணியாற்றியதற்காக வாழ்நாள் சாதனையாளா் விருது ந.முத்துகிருஷ்ணன், கே.அலமேலு ஆகியோருக்கு வழங்கி செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:


பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்வரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம்.


பொதுத் தோ்வுக்கு முன்பு இரண்டு திருப்புதல் தோ்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு திருப்புதல் தோ்வு மட்டுமே நடைபெறும்.



Post Top Ad