பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு. - Asiriyar.Net

Thursday, January 27, 2022

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

 




தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 




வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறுதி முடிவு முதலமைச்சர் தலைமையில் உள்ள குழு எடுக்கும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.





No comments:

Post a Comment

Post Top Ad