தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவர்களுக்கான விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த மண்டலங்களுக்கு சென்றுள்ளன. அவற்றை மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடுகளைசெய்துள்ளோம். பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து முறையாக காலிப் பணியிடங்களை் அவர்கள் நிரப்பாமல் விட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை படிப்படியாக சரி செய்து வருகிறோம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment