அரசு கடிதத்தில்தெரிவித்தவாறு 26.11.2020 அன்று நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பான விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உடன் அனுப்புமாறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங் களில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் விவரங்களையும் பெற்று கல்வி மாவட்ட அளவில் அரசு அரசு உதவி பெறும் பள்ளி அலுவலக பணியாளர்கள் என தனித்தனியாக தொகுப்பு விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 26 11 2020 அன்று காலை 10 மணிக்குள் இவ்வுலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் பொறுத்தவரையில் தற்போது திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விவரத்தினை தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து மேற்படி விவரத்தினை எழுத்து மூலமாகவோ குறுஞ்செய்தி வாட்ஸ்அப் மூலமாகவும் மெயில் மூலமாகவோ பெற்று அதன் அடிப்படையில் தங்களது பள்ளி சார்ந்த விவரங்களை உடன் சார்ந்த விவரங்களை உடன் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
முதன்மை கல்வி அலுவலர்
No comments:
Post a Comment