ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்து செய்ய வேண்டிய பணிகள்- ஆணையர் பட்டியல் வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 17, 2020

ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்து செய்ய வேண்டிய பணிகள்- ஆணையர் பட்டியல் வெளியீடு






பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் அரசு / அரசு உதவி பெறும் மாநகராட்சி / தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 17 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது .


அரசுத் தேர்வுகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை ( செயல்முறைத் தேர்வுகள் உட்பட ) திட்டமிட்டபடி நடைபெறும் இத்தேர்வுகள் முடியும்வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது . விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்துமாறும் மேலும் மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை / சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது .


மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நடப்புக் கல்வி ஆண்டிற்குரிய தேர்வுப் பணிகள் மற்றும் 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய TLM Preparation , Year Plan Preparation , Time Table Preparation , DIKSHA App மூலம் QR code ல் உள்ள பாட விவரங்களை சேகரித்தல் , Activity , do your know - ல் தரப்பட்டுள்ள தகவலுக்குரிய விவரங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல் , ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல் , புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ளும் வண்ணம் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post Top Ad