பள்ளியில் மாணவரை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் நல்லபள்ளியிலுள்ள அவ்வைநகரில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளி மாணவர் ஒருவரை அங்கு பணியாற்றும் ஆசிரியர் சதீஷ்குமார் 40 என்பவர் அடித்ததாக புகார் எழுந்தது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களது பரிந்துரையின்படி சதீஷ்குமாரை சி.இ.ஓ. கணேஷ்மூர்த்தி 'சஸ்பெண்ட்' செய்தார்.