வியக்க வைக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 4, 2020

வியக்க வைக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!!


விடுமுறை எடுக்காமல்‌ பள்ளி வந்த 20 மாணவ, மாணவிகளை தனது சொந்த செலவில்‌ விமானத்தில்‌ அரசு பள்ளி தலைமை ஆசிரியர்‌ சுற்‌றுலா அழைத்துச்‌ சென்‌றுள்ளார்‌. விருதுநகர்‌ மாவட்டம்‌, சிவகாசி ஒன்றியம்‌ மங்கலம்‌ கிராமத்தில்‌ அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி யில்‌ 60க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள்‌ படிக்கின்றனர்‌. இங்கு 5ம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்‌ கள்‌ ஒரு சிலர்‌ அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளனர்‌. இவர்களுக்கு பள்ளிக்கு வரும்‌ ஆர்வத்தை அதிகரிக்‌கும்‌ நோக்கில்‌, தலைமை ஆசிறியர்‌ ஜெயச்சந்திரன்‌, விடுமுறை எடுக்காமல்‌ மாணவர்கள்‌ பள்ளிக்கு வந்தால்‌ தனது சொந்த செலவில்‌ சென்னைக்கு சுற்றுலா அழைத்து செல்‌வதாகவும்‌, சென்னையில்‌ இருந்து மீண்டும்‌ சிவ காசிக்கு விமானத்தில்‌ அழைத்து வருவதாகவும்‌ 4 மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்‌. 
இதன்‌ பின்‌ ஒரு சில மாணவர்களை தவிர ம்‌ வகுப்பில்‌ படிக்கும்‌ அனைத்து மாணவர்களும்‌ பள்ளிக்கு விடுமுறை எடுக்‌ காமல்‌ வந்துள்ளனர்‌. இதைத்‌ தொடர்ந்து தலைமை ஆசிரியர்‌ ஜெயச்சந்திரன்‌ 5ம்‌ வகுப்பு படிக்கும்‌ 20 மாணவ, மாணவிகள்‌, 4 ஆசிரியர்களை கடந்த வாரம்‌ சென்னைக்கு ரயிலில்‌ சுற்றுலா அழைத்து சென்‌ றார்‌. அங்கு பல இடங்க ளையும்‌ மாணவர்களுக்கு சுற்றிக்‌ காட்டி சிவகாசிக்கு திரும்பும்போது மதுரைக்கு விமானத்தில்‌ மாணவர்‌ களை அழைத்து வந்துள்‌ளார்‌. 
இதுகுறித்து தலைமை ஆசிரியர்‌ ஜெயச்சந்திரன்‌ கூறுகையில்‌, “மாணவர்‌ களை உக்குவிப்பதற்‌காக, சுமார்‌ ₹1 லட்சம்‌ செலவில்‌ 5ம்‌ வகுப்பு படிக்‌கும்‌ 29 மாணவ, மாண விகள்‌ மற்றும்‌ 4 ஆசிரியர்களை சென்னைக்கு ரயிலில்‌ அழைத்து சென்‌ றேன்‌. பின்‌ சென்னை யில்‌ இருந்து மதுரைக்கு விமானத்தில்‌ அழைத்து வந்தேன்‌. மாணவர்களின்‌ உற்‌ சாகத்தை கண்டு வியப்படைந்தேன்‌”” என்றார்.



Post Top Ad