பக்ரீத் பண்டிகை என்றால் என்ன?
தியாகத்திருநாள் என்றால் இசுலாமிய பெருமக்களால் கடைசி மாதமான துல்ஹஜ் 10 நாள் கொண்டாடப்படும் ஈத் பெருநாள். இறை தூதர் இப்ராஹிம் தனது தவப்புதல்வன் இஸ்மாயிலை பலியிட துணிந்த போது இறைவன் தடுத்து ஒரு ஆட்டினை பலியிடச் செய்து மகனை காப்பாற்றினார்.
அதன் விளைவாக ஒட்டகம் ஆடு போன்றவற்றை பலியிட்டு தியாக திருநாள் கொண்டாடப் படுகிறது. பலியிட்ட இறைச்சியினை மூன்று பங்காக்கி. ஒரு பங்கு அண்டை வீடு நண்பர்களுக்கு ஒரு பங்கு ஏழைகளுக்கு ஒரு பங்கு உடையவர்களுக்கு என பிரித்து வழங்கி கொண்டாடி மகிழ்வர்.
இசுலாமிய நண்பர்களுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்