பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO செயல்முறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 14, 2020

பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO செயல்முறைகள்

 



பார்வையில் காணப்பட்டுள்ள செயல்முறைகள் படி தற்போது covid-19 காரணமாக பள்ளிகள் அரசின் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு மாணவர்களை வருகை புரிய செய்யக்கூடாது என பலமுறை அறிவுரை வழங்கியும் சில பள்ளிகளில் மாணவர்களை வருகை புரிவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.



 எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் செயல்பட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் அறிவுரை வழங்கப்படுகிறது இதுபோன்ற புகார்கள் பெறப்பட்டு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மதுரை மாவட்டம்





Post Top Ad