தமிழக அரசு குறித்து வாட்ஸ் அப்பில் அவ தூறு பரப்பியது தொடர்பாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைநடத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தமிழகத்தில் கொரோனா. ஊரடங்கு காரணமாக பள் ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம். வகுப்புகளை நடத்தி வருகின் றன. அதேசமயம், அரசுப்பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை, கல்வி சார்ந்த நடவடி.க்கைகளி லும், பாடம் சார்ந்த பயிற்சிகளி லும் ஈடுபட அறிவுறுத்தப்பட் டுள்ளது.இதனிடையே, சேலம் மாவட்டத்தில் தொடக்கக் கல் 'வித்துறை ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குரூப்களில், தமிழக அரசு குறித்த அவதூறு பரப்பிய விவ காரம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “சேலம் மாவட்ட ஆசிரியர்கள் பல்வேறு விதமான வாட்ஸ் அப் குழுக்களை ௨௬. வாக்கி, அதன் மூலம் கல்வி சார்ந்த மற்றும் பிற பயனுள்ள தகவல்களை படர்ந்து வருகின்ற. னர்... மாவட்டத்தின் இழக்கு பகுதியில் உள்ள ஓரிரு ஒன்றி யங்களைச் சேர்ந்த தொடக் கக் கல்வித்துறை ஆசிரியர் கள், குழுவை பயன்படுத்தி வருவ தாக கூறப்படுகிறது. சமீப கால மாக அந்த குழுவில், தமிழக அரசு பற்றியும், முதல்வரை பற். றியும் கேலிக்குள்ளான வகை யில், அவதூறு பரப்பப்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து அதே குழுவில் உள்ள ஆசிரியர்கள் சிலர், ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அவரின் உத்தரவின் பேரில், கல்வித்துறை அதிகா. றிகள் ஆசிரியர்களிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர். இதில், சலவிவகாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சம் பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது: 'நடவடிக்கை பாயும் என எதிர் பார்க்கப்படுகிறது,” என்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அவதூறு தொடர்பாக வந்த புகாரின் பேரில், விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,” என்றனர். தமிழக அரசை அவ. தூறு செய்ததற்காக, ஆசிரியர்க ளிடம் விசாரணை நடத்தப் பட்டு வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.