தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா? - Asiriyar.Net

Monday, May 6, 2019

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?





தேங்காய் பாலில் உடல் பலத்திற்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் சி, இ, பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

* தேங்காய் பால் உட்கொள்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி மாரடைப்பு வருவதை குறைக்கிறது.

* வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க தேங்காய்ப்பால் மூலம் முடியை அலச முடி மிருதுவாகும்

* தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.

உடல் எடை குறையும்.

* வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

* தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.


* தேங்காய் பால் உடலின் செரிமான மண்டலத்தினை சீர்செய்து உடல் நலத்தினை மேம்படுத்துகிறது.

* தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

* தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. கர்ப்பிணிகளுக்கு இது நல்லது.

* தேங்காய் பாலில் உள்ள பொட்டாஷியம் சத்து உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

* நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

* பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற நோய் வராமல் தவிர்க்கும், இதில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

* அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

* கீல்வாதம் இருப்பவர்கள், தேங்காய் பால் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Post Top Ad