RTE- கீழ் CBSE பள்ளிகளிலும் 25% இடங்கள் ஒதுக்கீடு - தமிழக அரசு முடிவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 16, 2020

RTE- கீழ் CBSE பள்ளிகளிலும் 25% இடங்கள் ஒதுக்கீடு - தமிழக அரசு முடிவு.



சுய நிதிப் பள்ளிகளில் ஏழை எளிய பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய் வது , சிபிஎஸ்இ பள்ளிகளி லும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விதியை கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது . அந்த சட்டம் அனைத்து மாநிலங்களி லும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரி வித்தது . அதன்படி கடந்த 2010ம் ஆண்டு முதல் பெரும்பாலான மாநி லங்களில் இந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது .

தமிழகத்திலும் அந்த சட் டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு 2011ம் ஆண்டில் அர சாணை பிறப்பித்தது . அத்துடன் மேற்கண்ட சட்டத்தில் தெரிவிக்கப் பட்ட முக்கிய அம்சங்க ளில் , சமூகத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த ஏழை , எளிய பிரிவை சேர்ந்த குழந்தைகள் தனியார் சுய நிதிப் பள்ளி மாண வர் சேர்க்கையில் 25 சத வீதம் சேர்க்கப்பட வேண் டும் . அதற்கான கல்விச் செலவை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை தெரி வித்தது . அதன் படி தமிழகத் தில் கடந்த 4 ஆண்டுக ளாக தனியார் சுயநிதி மெட்ரிக்குலேஷன் பள் ளிகளில் ஏழை , எளிய மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகள் 25 சதவீதம் பேர் சேர்க்கப் பட்டு வருகின்றனர் .


தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இந்த 25 சத வீத இடங்களை வழங்கி வரும் நிலையில் , மத்திய அரசு பாடத்திட் டத்தின் கீழ் நடத்தப்ப டும் ( சிபிஎஸ்இ ) தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஏழை எளிய நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வரு கின்றனர் . அதனால் சிபி எஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிக ளையும் இந்த திட்டத்தில் இணைக்க அரசு திட்ட மிட்டு வருகிறது . ) இதையடுத்து , தமிழ கத்தில் இயங்கும் தனி யார் சுய நிதி சிபிஎஸ்இ பள்ளிகள் எத்தனை , அவற்றில் ஆரம்பப்பள் ளிகள் எத்தனை , என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விவரம் சேகரித்து வருகிறது . இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 600க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவ மாணவியர் படித்து வரு கின்றனர் . அவர்களில் தொடக்க ( பிரை மரி ) , நடு நிலை ( அப்பர் பிரை மரி ) பள்ளிகளில் மட்டும் சுமார் 7 ஆயிரம் மாணவ மாணவியர் படித்து வரு கின்றனர் .

இந்த இடங்க ளில் மாணவர்கள் சேர்க் கப்படும் போது , 25 சதவீதம் ஏழை , எளிய மற் றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை கட் டாயமாக்க பள்ளிக் கல் வித்துறை முடிவு செய்துள் ளது . முன்னதாக சில சிபி எஸ் இபள்ளிகளில் கடந்த ஆண்டுகளில் 25 சதவீத அடிப்படையில் குழந்தை கள் சேர்க்கப்பட்டும் அதற் கான கல்வித் தொகையை அரசு இன்னும் வழங்க வில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது . அதனால் அந்த பள்ளிகள் 25 சதவீத இடங்களை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது . இருப்பினும் , வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து தனியார் சிபி எஸ்இ பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மற் றும் நலிந்த பிரிவினருக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஆணை பிறப்பிக்க உள்ளது . அதற்காக பள் ளிகளிடம் இருந்து விவரங் கள் கேட்டுள்ளது.

Post Top Ad