![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDB4YQhyphenhyphenaC3H2H_MdBaoi-bt3TNTAHG_4wFQyx6i8wT7hoA5Gx_PMTJ5FSVMauD2fXOALr29JDsw0BkmAcur0uiOV_xSilSWRmz1luhSj-ojDa-tADM_qEQIf9TaczDwPQxmWe8ik8ZzpM/s1600/IMG_ORG_1587693944443.jpeg)
மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக விலகலை கடைப்பிடித்து இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்காத ஊரகப்பகுதிகளில் ஏரிகளை தூர்வாருதல், கட்டுமான பணிகள் சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.