கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி - Asiriyar.Net

Thursday, August 23, 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி


கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள் கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள பேருக்கு ஏற்பட்டு லட்ச கணக்கான மக்கள் தண்ணீர் உணவு இன்றி இன்றும் அவதியுற்று வருகின்றனர் .

சமூக நல அமைப்புகள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பு வைத்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சார்பில் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து கேரளா வெள்ள நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பிவைத்தனர் . 



இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி கூறுகையில் : பள்ளி மாணவர்கள் மத்தியில் மனிதநேய பண்புகளை வளர்க்க கேரளா வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்த்து இப்பகுதி பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளியின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் ஆனா சிறு உதவியை செய்கிறோம் . 


கேரளாவில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகளை அறிந்து இங்கு படிக்கும் சில மாணவர்கள் அங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து உள்ளனர் .இதனை கேரளா மக்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். 

பேட்டி : கோ.மூர்த்தி - பள்ளி தலைமை ஆசிரியர் - தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

Post Top Ad