ஆசிரியர் தகுதி தேர்வு- 7 ஆண்டுக்கு மட்டுமே:
டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது
2013ல் தேர்ச்சி பெற்றவர்கள்,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் 'டெட்' தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் சான்றிதழ் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், இன்று இதனை தெரிவித்துள்ளார்.