நீண்ட தூர பயணத்தின் போது வரும் வாந்தியை எப்படி தடுக்கலாம்..! - Asiriyar.Net

Thursday, September 12, 2019

நீண்ட தூர பயணத்தின் போது வரும் வாந்தியை எப்படி தடுக்கலாம்..!



பொதுவாக சில பேருக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வாந்தி, மயக்கம் போன்ற நிலை வரும். அப்படி நீண்ட தூரம் பயணம் செய்யும்போது வரும் வாந்தியை எப்படி தடுப்பது என பார்க்கலாம்.

சோம்பு:

பலவிதங்களில் சோம்பு நமக்கு பயன்படுகிறது. பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்க சோம்பு பயன்படுகிறது. பயணத்தின் போது சோம்பை வாயில் போட்டு மென்று வந்தால் வாந்தி வருவது இருக்காது.

எலுமிச்சை:

எலுமிச்சையில் இருக்கும் மினரல்ஸ் வாந்தி வருவதை உடனடியாக தடுக்கிறது. இதன் காரணமாக ஒரு எலுமிச்சம் பழத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும், வாந்தியும் வராது.



சர்க்கரை மற்றும் உப்பு:

உப்பு மற்றும் சர்க்கரை சிறிது நீரில் கலந்து குடித்து வர உடல் வறட்சி அடையாமலும், வாந்தி வராமலும் தடுக்கும்.

கிராம்பு:

ஒரு சிறிய கிராம்பு துண்டை வாயில் போட்டு மென்று வர வேண்டும். இவ்வாறு செய்தால் கிராம்பின் வாசனையும், அதன் சுவையும் வாந்தி வருவதை உடனடியாக தடுத்து நிறுத்தும்.





இஞ்சி:

சிறிதளவு இஞ்சியை பயணம் செய்யும் நேரங்களில் நீரில் போட்டு அத்துடன் சிறிது தேன் கலந்து பயணம் செய்யும் நாட்களில் குடித்து வருவதன் காரணமாக இந்த பிரச்சனையை எளிமையாக சரி செய்துவிடலாம்.


Post Top Ad