ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றுங்கள்" : பிரதமர் மோடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 3, 2020

ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றுங்கள்" : பிரதமர் மோடி





ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குளை அணைத்துவிட்டு அனைவரும் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார். கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என புகழாரம் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.




Post Top Ad