பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு - Asiriyar.Net

Sunday, August 11, 2019

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு



கல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

கல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 22ம் தேதி வரை 3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர்கள் 32 பேருக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்கள் 70 பேருக்கும் மாமல்லபுரத்தில் 3 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியின் போது மாணவர் சேர்க்கை விவரங்கள், பள்ளிக்கட்டிட நிலை மற்றும் விளையாட்டு மைதானங்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு நடத்தப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Post Top Ad