ஜேக்டோ ஜியோ நிர்வாகி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 1, 2019

ஜேக்டோ ஜியோ நிர்வாகி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு


ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

* அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு


தமிழக அரசுத் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்த மு.சுப்பிரமணியன்,  தமிழக அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவராகவும், ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து, வரும் 3ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.



Post Top Ad