அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 1, 2019

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



மாணவிகள் இறுக்கமான மேல்சட்டை, லெகின்ஸ் போன்றவற்றை அணிந்துகொண்டு வரக்கூடாது. மாணவர்கள் ‘போலீஸ் கட்’ முறையில் முடியை வெட்டிக் கொண்டு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினமே அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு காலை 9.15க்குள் வந்துவிட வேண்டும். பள்ளிக்கு சைக்கிளை தவிர பைக், மொபட்களை கொண்டு வரக்கூடாது. ஆன்ட்ராய்டு போன்கள், மொபைல் போன்களையும், பிற எலக்ட்ரானிக் சாதனங்களையும் மாணவ, மாணவிகள் கொண்டு வரக்கூடாது. மீறி எடுத்து வந்தால் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பொருட்களை மீண்டும் வழங்கக்கூடாது.

தலை முடியை ஸ்டைல் என்ற பெயரில் ஹிப்பி, பங்க், கலர் சாயம் போடுதல் என்று இல்லாமல் மாணவர்கள் ‘போலீஸ் கட்’ முறையில் முடியை வெட்டிக்கொண்டு வர வேண்டும். அரைக்கை சட்டை, டவுசர், பேன்ட் மட்டுமே அணிய வேண்டும். பள்ளி வளாகத்தில் சீருடைகள் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவிகள் பாரம்பரியமான முறையில் தைக்கப்பட்ட சீருடைகளை அணிந்து வர வேண்டும். 

டைட் பேன்ட், இறுக்கமான மேல்சட்டை, லெகின்ஸ் ஆடைகளை தவிர்க்க வேண்டும். பிறந்தநாள் என்ற பெயரில் பள்ளிக்குள் சீருடைகளை அணியாமல் வரக்கூடாது. லோஹிப், உடல் தெரியும்படி ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று 14 வகையான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி அவற்றை தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

Post Top Ad