Covid 19 - பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை - SOP - Commissioner Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 1, 2022

Covid 19 - பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை - SOP - Commissioner Proceedings

 




2022-2023 ஆம் கல்வியாண்டில் 2022 ஜீன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது . மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , மாணவர்களும் , ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் பார்வை 2 - ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ்க்காணும் வழிமுறைகளை அனைத்து தலைமையாசிரியர்களும் பின்பற்ற அறிவுறுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் -19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும் . எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.


3. பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.


4. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் Soap , Hand wash முதலியவை இருப்பதையும் தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.


5. தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் . உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை வகுப்பறைகளில் வேண்டும்.

6. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.


Click Here to Download - Covid 19 - SOP - Commissioner Proceedings - Pdf




Post Top Ad