இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு, விரைவில் துவங்குவதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வி துறை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், துார்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி, ஜெயலட்சுமி, கல்வி தொலைக்காட்சியின் நிர்வாக பொறுப்பில், சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக உள்ள, பொன்.குமார், கல்வி தொலைக்காட்சியின், தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.