தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை
* கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு
* சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டம்
* காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டம்
* வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்
ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.