கொரோனா தடுப்பு பணியில் பாதிப்படைந்தால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹2 லட்சம் - மருத்துவமனையில் இலவச சிகிச்சை தமிழக அரசு அறிவிப்பு.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அரசாணை : அத்தியாவசியமான துறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு . வரதராஜன் கூறுகையில் , " கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது . தற்போது அரசு அறி வித்த இந்த அறிவிப்பை வரவேற்கிறோம் .