தமிழகத்தில் தற்போது 43,205 மையங்கள் மூலம் 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இந்த மையங்களில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் கேட்டு போராடி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், தமிழகத்தில் சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களில் 25 மாணவர்களுக்கு குறைவாக பயன்பெறும் சத்துணவு மையங்களை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.