'அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில், 2 சதவீதம் இட ஒதுக்கப்படும்' என, 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர்,இ.பி.எஸ்., அறிவித்தார்.'ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளையாட்டு வீரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை, தமிழக அரசு ஏற்றது.இதையடுத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும்வீராங்கனையருக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.