இதுகுறித்து உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வி இயக்குநர் ராதிகா சூரி வெளியிட்ட அறிக்கையில், "இயற்கை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூமி கிரகத்தை மையமாகக் கொண்டு விநாடி வினா போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.