உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்ற உன்னதமான யோசனைகள்! - Asiriyar.Net

Tuesday, October 2, 2018

உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்ற உன்னதமான யோசனைகள்!

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால்  ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. உப்பு


2. புளி


3. வெள்ளை சர்க்கரை


4. வெங்காயம், பூண்டு


5. ஆங்கில மருந்து


6. கெமிக்கல் உணவு


7. உருளைக்கிழங்கு


8. அசைவ கொழுப்பு


9. பால் பதார்த்தங்கள்


10. பச்சை, வர மிளகாய்


11. ரீபைண்டு ஆயில்


12. மைதா, முட்டை


  



மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு  நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால்தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்தகழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ?என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்தமகத்துவம்  உண்டு.


எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்கமுடியும்  என்ற பட்டியல் கீழேகொடுக்கப்பட்டுள்ளது.உண்டு பயன் பெறவும்


உப்பை வெளியேற்றும் விதி


தீர்வு : காலை, பிற்பகல்,இரவு  மூன்று முறை பச்சையாக நான்குவெண்டைக்காயைஉணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.


புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாகநடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி


தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.


வெள்ளை சர்க்கரையின்  கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி


தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன்தோல்,  விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகுசேர்த்து  பருகவும்.



வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும்விதி


தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு  ஊதாநிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டுகத்திரிக்காய்  மற்றும்இரண்டு தக்காளி ஆகியஇரண்டையும் மிக்சியில்அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.


  


கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும்விதி


காலை இரவு இருமுறை  6கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள்,உப்பு  சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.


கடைகளிலும்,பாக்கெட்டிலும்  உள்ள கெமிக்கல் கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும்விதி


தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய்விதையுடன் மற்றும் ஒருமுழு எலுமிச்சை  தோலுடன்ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்துவடிகட்டி  சிறிது மஞ்சள்,உப்பு சேர்த்து  பருகவும்.


உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கிஒட்டியுள்ள மாவுச்சத்தைஉடலிருந்து  வெளியேற்றும்விதி


தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய்விதை  ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.


நார் சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.


அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை  மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி


காலை, பிற்பகல், இரவுமூன்று முறை முற்றியமுருங்கை விதை  இரண்டைஉணவுக்கு பின் 15  நிமிடம்சப்பி விட்டு  இறுதியில்மென்று முழுங்கவும்.


பச்சை மிளகாய்,வரமிளகாய்  ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றிமீண்டும் உடல் உறுப்புகளைபழைய  நிலைக்கு கொண்டுவரும் விதி



தினமும் காலையில் ஒருமுழு  பீர்கங்காய் தோலுடன்மற்றும் ஒரு முழுஎலுமிச்சை பழம் தோலுடன்ஆகிய இரண்டையும்மிக்சியில்  அரைத்துவடிகட்டி சிறிது மஞ்சள்,உப்பு சேர்த்து குடிக்கவும்.


உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலைஉட்கொண்டதால் கெட்டகொழுப்பு  அதிகரிக்கிறது.அதனை  வெளியேற்றும்விதி


காலை, பிற்பகல், இரவுமூன்று முறை நன்குஎண்ணெய் பதம்  கொண்ட50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்துபருகவும்.


மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி


தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழுஎலுமிச்சை  பழத்தைபச்சையாக தோலுடன் மிக்சியில்  நீர் விட்டுஅரைத்து வடிக்காமல்சிறிது மஞ்சள், உப்புசேர்த்து  பொறுமையாக சப்பி குடிக்கவும்

Post Top Ad