டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள்கழகத்தில், புள்ளியியல் விரிவுரையாளர் பதவியில், மூன்று காலியிடங்கள் உள்ளன.பொது, ஆதிதிராவிடர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோருக்கு தலா ஒரு இடம் காலியாகஉள்ளது.
இதற்கான தேர்வு, ஜன., 12ல் நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள், நவ., 11 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவியில் சேர, புள்ளியியல் பாடத்தில், முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.