Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 8, 2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள்




பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – முக்கிய வழிகாட்டுதல்கள்


1. திட்ட விரிவாக்கம்

17.09.2026 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

திட்டம் மாநிலம் முழுவதும் முறையாகவும் தடையின்றியும் செயல்படுத்தப்பட வேண்டும்.


2. முதன்மைக் குழு (Core Committee)

கிராம ஊராட்சி / பேரூராட்சி அளவில் முதன்மைக் குழு அமைக்க வேண்டும்.

இதில் ஊராட்சி/பேரூராட்சி பிரதிநிதி, பள்ளித் தலைமையாசிரியர்/முதல்வர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், SMC பிரதிநிதி மற்றும் கூட்டமைப்பு பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்.

SHG உறுப்பினர்களைத் தேர்வு செய்வதும், சமையலறை மையத்தை இறுதி செய்வதும் முதன்மைக் குழுவின் முக்கியப் பொறுப்பு.

3. சமையலறை மையம்

முன்னுரிமையாக பள்ளி வளாகத்தில் உள்ள மதிய உணவு சமையலறை/சத்துணவு மையத்தையே காலை உணவு தயாரிக்கும் இடமாக பயன்படுத்த வேண்டும்.

தேவையான பழுதுபார்ப்பு, மின்சாரம், சேமிப்பு வசதி, சமையல் பாத்திரங்கள் போன்றவை உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

4. SHG உறுப்பினர் தேர்வு – முக்கிய நிபந்தனைகள்

உணவு தயாரிப்பில் அடிப்படை அறிவு/திறன் இருக்க வேண்டும்.

பொதுவாக 10ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மலைப்பாங்கான/தொலைதூர/பழங்குடியினர் பகுதிகளில் 10ஆம் வகுப்பு படித்தவர் கிடைக்காவிட்டால் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு படித்தவர் தேர்வு செய்யலாம்.

கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.

போதுமான நிதி நிலை/மூலதன வசதி கொண்ட SHG ஆக இருக்க வேண்டும்.

உறுப்பினரின் விருப்பக் கடிதம் மற்றும் குழுத் தீர்மானம் பெறப்பட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சமையல் மற்றும் திறன் பயிற்சி வழங்கப்பட வேண்டும். 

5. பயிற்சி

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சமையல் தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மூலம் பயிற்சி வழங்க வேண்டும்.

பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் கைப்பேசி செயலியில் தகவல் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும்.

திட்டம் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே பயிற்சி நிறைவு செய்ய வேண்டும்.

6. 10 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள்

தனி சமையலறை அமைக்க வேண்டிய அவசியமில்லை.

அருகிலுள்ள அதிக மாணவர்கள் உள்ள பள்ளியில் உணவு தயாரித்து Hot Box மூலம் வழங்கலாம்.

இத்தகைய பள்ளிகள் ஆரம்பத்திலேயே அருகிலுள்ள அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும்.


7. சமையல் மற்றும் உணவு வழங்கும் நேரம்

  • காலை 6.00 மணிக்கு சமையல் தொடங்க வேண்டும்.
  • காலை 8.00 மணிக்குள் சமையல் முடிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு காலை 8.00–9.00 மணிக்குள் சூடாக உணவு வழங்க வேண்டும்.
  • பாத்திரங்களை சுத்தம் செய்து காலை 9.30 மணிக்குள் சமையல் பணியாளர்கள் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும்.
  • சமையலுக்கு முன்பும் உணவு பரிமாறிய பின்பும் பாத்திரங்கள் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • உணவுப் பொருட்களை வைக்க செய்தித்தாள்களைப் பயன்படுத்தக் கூடாது.

8. உணவுப் பொருட்கள் கொள்முதல்

அனைத்து உணவுப் பொருட்களும் தரமானதாகவும் உணவுத் தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

அரிசி, உப்பு, எண்ணெய், பருப்பு போன்ற முக்கியப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.

இப்பொருட்களை உள்ளூரில் தனியாக கொள்முதல் செய்யக்கூடாது.

கொள்முதல் செய்வதற்கு முன் பொருட்களின் தரம் சரிபார்க்கப்பட வேண்டும்.

9. எரிவாயு மற்றும் பாத்திரங்கள்

திட்டம் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே தேவையான பாத்திரங்கள் மற்றும் LPG வசதிகள் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி மையத்திற்கும் 2 LPG சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

10.தலைமையாசிரியரின் முக்கியப் பொறுப்புகள்

காலை உணவு பெற விரும்பும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்தல்.

சமையலறையை உரிய நேரத்தில் திறந்து வைக்க ஏற்பாடு செய்தல்.

உணவு பரிமாறும் நேரத்தில் ஆசிரியர் ஒருவர் சுழற்சி முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்தல்.

உணவு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்தல்.

உணவு தரம் மற்றும் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதை கண்காணித்தல். 

11. மாணவர் எண்ணிக்கை

பள்ளிக் கல்வித்துறையின் தரவுகள் மற்றும் பள்ளியின் தினசரி வருகைப் பதிவின் அடிப்படையில் தினசரி தேவையான அளவு காலை உணவு தயாரிக்க வேண்டும்.

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப SHG உறுப்பினர்கள் மற்றும் தேவையான சமையல் வசதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

12. தினசரி பதிவேடுகள்

கீழ்க்கண்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்:

  • மாணவர் வருகைப் பதிவு
  • மொத்த மாணவர் எண்ணிக்கை
  • பண வரவு–செலவு பதிவு
  • உணவுப் பொருட்கள்/இருப்பு பதிவு
  • அதிகாரிகளின் ஆய்வுக் குறிப்புகள்
  • செலவினம் மற்றும் உள்ளூர் கொள்முதல் பதிவு
  • உணவின் சுவை குறிப்பு பதிவு. 

13. குறைபாடு / முறைகேடு கண்டறியப்பட்டால்

இருப்புப் பொருட்கள் அல்லது நிதியில் குறைபாடு கண்டறியப்பட்டால் உரிய அலுவலர்கள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவையான புகார் மற்றும் தொடர் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

14. கண்காணிப்பு – மிக முக்கியம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய மாவட்ட அலுவலர்கள் மூலம் வாரத்திற்கு 3 நாட்கள் காலை உணவு மையங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

நியமிக்கப்பட்ட மண்டல உதவித் திட்ட அலுவலர்கள் வாரத்திற்கு 10–15 பள்ளி மையங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

உதவித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் தினசரி தொடர் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

உணவின் தரம் மற்றும் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். 

15. மூன்று அடுக்கு கண்காணிப்பு அமைப்பு

  • மாவட்ட அளவு → வட்டார அளவு → ஊராட்சி/பேரூராட்சி அளவு
  • மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு.
  • வட்டார அளவில் BDO/Executive Officer உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு.
  • ஊராட்சி/பேரூராட்சி அளவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட முதன்மைக் குழுவே கண்காணிப்புக் குழுவாக செயல்படும். 

16. நிதி நிர்வாகம்

திட்டத்திற்கென தனி வங்கிக் கணக்கு பராமரிக்க வேண்டும்.

கணக்கின் பெயர் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட கணக்கு” என மாற்றப்பட வேண்டும்.


நிதி பரிவர்த்தனைகள் வங்கி/மின்னணு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.


ஊராட்சி/பகுதி அளவிலான கூட்டமைப்புகள் நேரடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடாது.

வரவு–செலவு மற்றும் ரசீதுகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். 

DEO / BEO / தலைமையாசிரியர்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டிய TOP 10

1. 17.09.2026 முதல் 6–8ஆம் வகுப்புக்கு திட்டம் தொடங்குதல்

2. அனைத்து பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சரிபார்த்தல்

3. 10-க்கும் குறைவான மாணவர் பள்ளிகளை அருகிலுள்ள மையத்துடன் இணைத்தல்

4. SHG சமையல் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்தல்

5. 15 நாட்களுக்கு முன் பயிற்சி முடித்தல்

6. சமையலறை, LPG, பாத்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்தல்

7. TNCSC மூலம் முக்கிய மளிகைப் பொருட்களைப் பெறுதல்

8. 6.00 AM–8.00 AM சமையல்; 8.00–9.00 AM உணவு வழங்குதல்

9. தினசரி பதிவேடுகள் மற்றும் Mobile App பதிவுகளை உறுதி செய்தல்

10. தொடர் கள ஆய்வு + உணவின் தரம்/அளவு + நிதி/இருப்பு கண்காணிப்பு மேற்கொள்ளுதல்.





No comments:

Post a Comment

LightBlog