திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்: மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள் - Asiriyar.Net

Wednesday, January 7, 2026

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்: மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

 



கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும் மேலாக இதற்​காக பல்​வேறு போராட்​டங்​களை அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் நடத்​தி​யும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் கிணற்​றில் போட்ட கல்​லாகவே கிடந்​தது.



தற்​போது, தேர்​தல் நெருங்​கும் நிலை​யில், அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் குதிக்​கும் சூழல் ஏற்​பட்​ட​தால், ககன்​தீப்​சிங் பேடி தலை​மையி​லான குழு​வின் பரிந்​துரைப்​படி, ‘தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்தை (டாப்​ஸ்)’ முதல்​வர் ஸ்டா​லின் ஜனவரி 3-ல் அறி​வித்​தார். இதனிடையே, தேர்​தலில் அரசு ஊழியர்​களின் குடும்ப ஓட்​டு​களை கவர்​வதற்​காக இந்​தத் திட்​டத்தை அறி​வித்​திருப்​ப​தாக விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.


திட்​டத்​தின் முக்​கிய அம்​சங்​கள்: இந்த திட்​டத்​தில், ஊழியர்​கள் பெற்ற கடைசி மாத ஊதி​யத்​தில் 50 சதவீதம் ஓய்​வூ​தி​ய​மாக வழங்​கப்​படும். இதற்கு பணி​யாளர்​களின் பங்​களிப்​பாக ஊதி​யத்​தில் 10 சதவீதம் பிடிக்​கப்​படும். ஓய்​வூ​தி​ய​தா​ரருக்கு 6 மாதங்​களுக்கு ஒரு​முறை அகவிலைப்​படி உயர்த்​தப்​படும். ஓய்​வூ​தி​ய​தா​ரர் இறந்​து​விட்​டால் அவர் பெற்​று​வந்த ஓய்​வூ​தி​யத்​தில் 60 சதவீதம் குடும்ப உறுப்​பினருக்கு ஓய்​வூ​தி​ய​மாக தரப்​படும். பணிக்​காலத்​தில் இறந்​தால் ரூ.25 லட்​சம் வரை பணிக்​கொடை அளிக்​கப்​படும் என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் உள்​ளன.


இந்​நிலை​யில் 23 ஆண்​டு​கால கோரிக்​கையை பூர்த்தி செய்​யும் தமிழக அரசின் முயற்​சியை வரவேற்​ப​தாக ஜாக்​டோ-ஜியோ, போட்​டா-ஜியோ ஆகிய பிர​தான கூட்​டமைப்​பு​கள் வரவேற்​றுள்​ளன. அதேசம​யம், மற்​றொரு தரப்​பினர் கடும் அதிருப்​தியை வெளிப்​படுத்தி மீண்​டும் போராட்​டங்​களை அறி​வித்​துள்​ளனர். ஜாக்​டோ-ஜியோ அமைப்​பிலும் டாப்ஸ் திட்​டத்​துக்கு எதி​ரான குரல்​கள் வலுக்​கின்​றன.


இதுகுறித்​தான சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் கருத்​துகள் வரு​மாறு: பா.ஆரோக்கியதாஸ் - பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழக அரசின் புதிய ஒய்​வூ​தி​யத் திட்​டம் என்​பது ஏமாற்று வேலை. இதில் அரசின் பங்​களிப்பு இல்​லை. உறு​தி​யளித்​த​படி பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நிறை​வேற்​றாமல் இருப்​பது ஏற்​புடையதல்ல. அரசால் லாபமடைந்த குறிப்​பிட்ட சில சங்​கங்​கள் மட்​டுமே இதை ஆதரிக்​கின்​றன. இதை​விட மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் கூடு​தலான சிறப்​பம்​சங்​கள் உள்​ளன.


நீதிப​தி​கள், எம்​எல்ஏ, எம்​பி-க்​களுக்கு பங்​களிப்பு இல்​லாத ஓய்​வூ​திய திட்​டமே அமலில் உள்​ளது. ஆனால், பல ஆண்​டு​களாக அரசுக்​காக பணி​யாற்றி ஒய்வு பெறு​பவர்​களுக்கு அவர்​களிடம் பிடித்த பணத்​தையே வைத்து பலன்​களை அளிப்​பது நியாயமற்ற செய​லாகும். இந்​தத் திட்​டத்​தில் ஓய்​வு​பெறு​பவர்​களுக்கு பணிக்​கொடை மற்​றும் முறை​யான ஓய்​வூ​தி​யம் கிடைக்க வழி​யில்​லை. பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தையே அமல்​படுத்த வேண்​டும்.


சி.​முரு​கன் - ஜாக்​டோ-ஜியோ உயர்​மட்​டக் குழு உறுப்​பினர் சிபிஎஸ் திட்​டத்​தில் ஊழியர்​கள் மற்​றும் அரசின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து மொத்​த​மாக எங்​களிடம் கொடுத்​து​விடு​வார்​கள். ஆனால் இதில், ஊழியர்​களின் பங்​களிப்பு தொகை எப்​படி திரும்ப வழங்​கப்​படும் என்​பது குறித்து தெளி​வில்​லை. அதே​போல், நிதிப் பற்​றாக்​குறை ஏற்​பட்​டால் மட்​டுமே ரூ.13 ஆயிரம் கோடி தமிழக அரசு செல​விடும் என்​பதும் சரியல்ல. ஏனெனில், ஊழியர்​களின் பணம் ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அதற்​கான வட்டி மற்​றும் கமிஷன் விவரங்​கள் வெளிப்​படை​யாக இல்​லை.


ஜாக்​டோ-ஜியோ​வில் உள்ள சில சங்​கங்​கள் அரசுக்கு ஆதரவு தெரி​வித்​தா​லும், பல சங்​கங்​கள் எதிர்ப்​பில் உள்​ளன. அரசாணை வந்​ததும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர திட்​ட​மிட்​டுள்​ளோம். ராஜஸ்​தான் உள்​ளிட்ட 7 மாநிலங்​கள் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​திய நிலை​யில், பொருளா​தா​ரத்​தில் முன்​னேறிய தமிழக அரசும் அதை அமல்​படுத்த வேண்​டும். இல்​லை​யெனில் தேர்​தலில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.


No comments:

Post a Comment

Post Top Ad