“ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம்” - கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 22, 2023

“ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம்” - கோரிக்கை!

 

தூத்துக்குடி மாவட்டம் , புதூர் ஒன்றியம் , நம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருமதி.வி.குருவம்மாள் மற்றும் திரு.ரா.பாரத் ஆகியோர் மீது , 21.03.2023 அன்று அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் சிவலிங்கம் அவரது மனைவி செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனுசாமி உள்ளிட்ட பலர் கூட்டாக சேர்ந்து, 


அநாகரிகமாக பண்பாடில்லாமல் மனித மிருகம் போல கையாலும் , செருப்பாலும் அடித்து காயப்படுத்தி கொடுர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . " மாதா , பிதா , குரு , தெய்வம் ” என்று ஆசிரியரை தாய் , தந்தைக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்த்த பண்பாடு நிறைந்த இனம் நம்முடைய திராவிட இனம் . இத்தகைய மூன்றாம் இடத்தில் வைத்து அழகு பார்த்தவர்களை அசிங்கப்படுத்தி , கேவலப்படுத்தும் பண்பாடற்றச் செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.


 ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்த இந்த அரசு , இதில் முனைப்போடு கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று " அடியக கேட்டுக் கொள்கிறேன் . நடக இனி பள்ளிகளில் தாக்குதல் நடைபெறாமல் ஆசிரியர்களை பாதுகாக்க , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து , வருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலேயே “ ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை ” இயற்ற வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தமிழக அரசையும் , கல்வித்துறையையும் கேட்டுக் கொள்கிறேன்




Post Top Ad