1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு இல்லை எனற செய்தி தவறு - பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 3, 2022

1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு இல்லை எனற செய்தி தவறு - பள்ளிக்கல்வித்துறை

 




1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை நடைபெறும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்பது குறித்த  எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டதாக அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது.


அதில், 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும்


6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்ததுடன் கண்டிப்பாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.








Post Top Ad