10, 12ம் வகுப்பு திருப்புதல் தோ்வு: அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 8, 2022

10, 12ம் வகுப்பு திருப்புதல் தோ்வு: அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது

 




பிளஸ் 2, பத்தாம் வகுப்பு திருப்புதல் தோ்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. பொதுத் தோ்வு நடத்துவதை போன்றே, திருப்புதல் தோ்வுகளையும் நடத்த வேண்டும்.


விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து, திருத்திக் கொள்ள வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி விடைத்தாள்களை அதே வகை பள்ளிகளுக்கே மதிப்பீட்டுக்கு வழங்கக் கூடாது. விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பள்ளி கல்வித் துறையின், ‘எமிஸ்’ மேலாண்மை தளம் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வழிகள் பின்னா் அறிவிக்கப்படும். திருப்புதல் தோ்வுகளை புகாா்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும்.



Post Top Ad