1 - 8ம் வகுப்பு - பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கற்பித்தல் திட்டம் - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 1, 2021

1 - 8ம் வகுப்பு - பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கற்பித்தல் திட்டம் - Director Proceedings

 

நவ.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வகுப்பு வாரியான கற்பித்தல் திட்டம் - தொ.க இயக்குநர் சுற்றறிக்கை.


கொரோனா பெருந்தொற்று கால நீண்ட இடைவெளிக்குப்பின்  திங்கள் கிழமை (2021 நவம்பர் 1) முதல்  தொடங்கவுள்ள I - VIII வகுப்புகளுக்கான கற்பித்தல் திட்டம் குறித்து தொடக்கக் கல்வி  இயக்குநர் சுற்றறிக்கை (எண்:2 நாள்:30.10.2021) வெளியிட்டுள்ளார். அதன்படி,


☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு கதை, பாட்டு, விளையாட்டு, வரைதல் உள்ளிட்ட மனமகிழ்ச்சிச் செயல்பாடுகளும்,


✌🏽 45 - 50-ஆம் நாள் வரை விடுப்புகால கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் புத்தாக்கப் பயிற்சிகளும்,


👍🏽 அதன்பின்னரே முதன்மைப்படுத்தப்பட்ட (அரசு தேர்வு செய்துள்ள பாடப்பகுதி மட்டும் அடங்கிய) பாடத்திட்டத்தைக் கற்பிக்க வேண்டும்.


இம்மூன்று படிநிலைகளுக்கான வழிகாட்டல்கள் & கட்டகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வகுப்பு வாரியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் தொடக்கக் கல்வி இயக்குநர் தனது சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி,


வகுப்பு - I:


☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.


👍🏽 இதனை நிறைவு செய்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம்.


1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் . இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.


வகுப்புகள் II - V:


☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.


✌🏽 45 - 50-ஆம் நாள் வரை புத்தாக்கப் பயிற்சிகள்.


👍🏽 இவ்விரண்டையும் நிறைவு செய்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம்.

2-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்காள வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் . புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45-50 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும். மாணவர்களுடைய கற்றல் அடைவு நிலைக்கேற்றாற்போல் காலஅளவை நீட்டிப்பதையும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துவதையும் ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.




வகுப்புகள் VI - VIII:


☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.


✌🏽 வகுப்பிற்கேற்ற கற்றல் அடைவை மாணவர் பெற்றிருப்பின் ஆசிரியரே ஒரு கால அளவை நிர்ணயித்து, அக்காலத்தில் புத்தாக்கப் பயிற்சிகளை மீள்பார்வையாக (Recall) பயன்படுத்திக் கொள்ளலாம்.


👍🏽 அதன் பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தைக் கற்பிக்கலாம்.


6. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 · 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் , மாணவர்கள் வகுப்பிற்கேற்ற சுற்றல் அடைவு நிலையில் இருந்தால் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை மீள்பார்வைக்காக பயன்படுத்தி கொள்ளலாம் . மீள்பார்வைக்கான காலஅளவை பயன்படுத்திக் பள்ளி அளவிலேயே மாணவர்கள் நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். அதன்பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுளது.



*ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த திங்கள்  திங்களன்று முழுமையாகிறது! உங்களின் வழக்கமான செயல்திறத்தால் நமது மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுகால இழப்புகளில் இருந்து மீண்டு பயன்பெற வாழ்த்துகள்.






















Post Top Ad