தேர்தல் பணியிலிருந்து விலக்குக் கோரிய ஆசிரியர்கள் - ஒழுங்கு நடவடிக்கை பாயும் என ஆட்சியர் உத்தரவு - Collector Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 24, 2021

தேர்தல் பணியிலிருந்து விலக்குக் கோரிய ஆசிரியர்கள் - ஒழுங்கு நடவடிக்கை பாயும் என ஆட்சியர் உத்தரவு - Collector Letter

 


வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் கீழ், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்/ வாக்குப்பதிவு அலுவலர் ஆக மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் நீர் நியமனம் செய்யப்பட்டுள்ளீர் . 


அரசுப்பணியில் தொடர்ந்து பணி செய்து வரும் முகவரியிற் கண்ட நீர், உள்ளாட்சித் தேர்தலில் கடமையாற்றுவதிலிருந்து விலக்குக் கோரி கொடுத்திருக்கும் காரணம் ஏற்புடையதல்ல. ஆகவே, தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதைத் தவிர்க்க, நீர் நிர்ணபிக்கப்பட்ட நாட்களில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டியது. இல்லையெனில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

ஓம்/அமர்குஷ்வாஹா, 

மாவட்ட தேர்தல் அலுவலர்,

திருப்பத்தூர்.

















Post Top Ad