அரசுப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்‌கை - தலைமையாசிரியர்களுக்‌கு பள்ளிக்கல்வி துறை பல்வேறு உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 19, 2021

அரசுப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்‌கை - தலைமையாசிரியர்களுக்‌கு பள்ளிக்கல்வி துறை பல்வேறு உத்தரவு

 


அரசுப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும்‌ வசூலிக்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு 


அரசுப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்‌கைக்கு எவ்வித கட்டணமும்‌ வசூ லிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 


கரோனா தொற்று குறைந்து வருவதைத்‌ தொடர்ந்து அரசுப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை பணிகள் கடந்த 14-ம்‌ தொடங்கப்பட்டன. தங்கள்‌ குழந்தைகளை அரசுப்‌. பள்ளிகளில்‌ ஆர்வமுடன்‌ சேர்த்து வருகின்றனர்‌. இதனால்‌ நடப்பு ஆண்டில்‌ 3 லட்சம்‌ மாணவர்கள்‌ கூடுதலாக சேருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 


 சில அரசுப்பள்ளி களில்‌ சேர்க்கையின்போது கட்டணங்கள்‌ வசூலிக்கப்படுவதாக புகார்கள்‌ எழுந்துள்ளன. அதைத்‌ தொடர்ந்து அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும்‌ வசூலிக்கக்‌ கூடாது என்று பள்ளிக்கல்வித்‌ துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம்‌ சார்பில்‌ அனைத்து   பள்ளி தலைமையாசிரியர்களுக்‌கும்‌ பல்வேறு அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. 


அதன்படி, அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையின்போது உரிய விதி முறைகளை பின்பற்ற வேண்டும்‌. விண்ணப்பம்‌ உட்பட எதற்கும்‌ கட்டணம்‌ வசூல்‌ செய்யக்‌ கூடாது. இதுதவிர எந்தநிபந்தனை அடிப்‌ படையிலும்‌ மாணவர்‌ சேர்க்‌ கையை நிறுத்தக்‌ கூடாது. மாற்றுச்‌ சான்றிதழ்‌ வழங்கும்போது எவ்வித புகார்களுக்கும்‌ இடமளிக்காமல்‌ செயல்பட வேண்டும்‌. 


அதேபோல்‌, புதிய மாணவர்‌ சேர்க்கை மற்‌றும் பள்ளியில்‌ இருந்து விலகி மாற்‌றுச்‌ சான்றிதழ்‌ பெறும்‌ மாணவர்‌ களின்‌ விவரங்களை பள்ளிக்கல்வி யின்‌ எமிஸ்‌ தளத்தில்‌ தினமும்‌ முறையாக பதிவேற்ற வேண்டும்‌. இதில்‌ ஏதேனும்‌ தவறுகள்‌ நடை பெற்றால்‌ அதுசார்ந்த தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்‌ என்பதால்‌ கூடுதல்‌ கவனத்துடன்‌ செயல்பட வேண்டும்‌. இவ்வாறு அறிவுறுத்தப்பட்‌ டுள்ளன.









Post Top Ad