தொடர்ந்து தள்ளி வைக்கப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நிபுணர்கள் கூறுவது என்ன..? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 21, 2021

தொடர்ந்து தள்ளி வைக்கப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நிபுணர்கள் கூறுவது என்ன..? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

 






தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதத்துக்கு தள்ளிப்போனது. அதன்படி, அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.




ஆனால் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருப்பதால், அதற்கு மறுநாள் நடக்க இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வை மட்டும் வேறொரு நாளுக்கு தள்ளி வைத்து அரசுத் தேர்வுத்துறை கடந்த 12-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 5-ந் தேதி (புதன்கிழமை) ஆங்கிலம் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.



இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால், பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத்தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் +2 பொதுத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவதால் மீண்டும் எப்போது தேர்வு நடைபெறும் என்று மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியுள்ளது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 



இது குறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகையில், +2 பொதுத்தேர்வு தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்படுவதால் மாணவர்களை மன அழுத்ததிற்கு ஆளாக்குகிறது. இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் பொறுமைகாத்து மாணவர்கள் பிடித்தமான விஷயங்களில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். +2 மாணவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மாணவர்களை நிதானமாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினர்.




Post Top Ad